Thursday, March 2, 2017

நினைவுகள்

காலம் வெல்லும் காதல் எல்லாம்
கனவாய் மட்டும் கலைந்திட்டாலும்
நினைவின் நிழலில் என்றும் வாழும்
கவிதை வடிவில் உயிராய் மீண்டும்

எத்தனை தூரம் எத்தனை காலம்
எங்கோ ஒதுங்கி  மறந்தாற்போல
திரிந்தபோதும் மின்னல்  பொழுதில்
நெஞ்சம் நிறைக்கும் சின்ன நினைவில்

கொஞ்சம் போல ஓரம் வந்து
நெஞ்சம் முழுதும் பொங்கி நிறைக்கும்
வந்த பொழுதில்  என்னை துரத்தும்
அந்த நினைவை என்ன சொல்ல?







No comments: