Wednesday, April 30, 2014

கண்ணாமூச்சி

வாழ்க்கை பாதையில்
ஒரு பொம்மலாட்டம்-
சொல்லாத எண்ணங்களில்
தெரியாத வண்ணங்களில்
தொலைந்த கனவுகளை
தேடும் குருடர்களாய் ...
எங்கோ என்றோ நிரடிய எண்ணங்களை
இங்கு இன்று தொடாமல் தொட்டுக்கொண்டு
வார்த்தை விளையாட்டில்
வாழ்கை தொலைப் போமோ?




No comments: