Friday, June 6, 2014

பிரிவின் வண்ணம்

சற்றே இருளாய் -
கருமை படர்ந்த மாலை பொழுதாய்
தனிமை தொடர்ந்த அந்த நேரம்
எண்ணம் கலங்கி வெறுமை படர்ந்து
தூரிகை எடுத்து எண்ணம் வரைய
வண்ணம் குழைக்க -
எண்ணம் போலே குழம்பிய வண்ணம்
கோடாய் குயிலாய் மரமாய் மடுவாய்
எங்கோ சென்று எதிலோ முடிந்து
பொருளே புரியா புதிய படமாய் ...

No comments: