Saturday, February 4, 2012

சில நினைவுகள்

நொடிகள் எல்லாம் நிமிடங்களில் கரைய
நிமிடங்கள் ஓடி மணிக்குள் மறைய
மணிகள் கூட நாட்கள், வாரங்கள், மாதங்கள் என்று
காலம் கரையும் கணக்கை வார்த்தையில் எப்படி?

நினைவு குமிழிகள் உடைந்த கனவுகள்
வெறும் சோப்புக்குமிழியாய்
சத்தம் இல்லா காற்றும் இல்லா
தடமே இன்றி வெறுமை நிறைக்கும்

சில நினைவுகள் போல
கனவில் மட்டும் கலராய் நிறைந்து
விழித்த போதில் நீரில் கரைந்து -விழி நீரில் கரைந்து
கானல் நிஜமாய் கனவின் உருவாய் ...

No comments: