Wednesday, January 18, 2012

இசை

எங்கோ பிறந்து
எதிலோ கலந்து
காற்றாய் நுழைந்து
பாட்டாய் கரைந்து
மனதை வருடி
இதயம் நிறைக்கும்
இசையின் வடிவம்
யாரோ அறிவார்?
காலம் வென்ற
காதல் சொல்லி
மரணம் என்ற
வலியும் சொல்லி
உறவின் அருமை
பிரிவில் சொல்லி
எல்லாம் சொல்லும்
இசையின் வலிமை
மனிதம் இருக்கும்
வரையில் இருக்கும்.


No comments: