Friday, January 20, 2012

மழை மாலை

கரு சுமந்த மேகங்கள்

இருள் நிறைந்த அந்தி வேளை

தலை குளித்த மரம் நிறைந்த

கார் வண்ண நெடுஞ்சாலை -

கடந்து செல்ல நெடுந்தூரம்

துணையிருக்கும் மெல்லிசை

மழைகால மாலை கூட

சிலநேரம் சுகமாக ...

நினைவலையின் சாரலிலே

நனைந்தபடி மெதுவாக

நேரத்தை துரத்தாமல்

நிஜ நிழலில் ஒதுங்காமல்

சுகமான சிறு பயணம்!

No comments: