Monday, January 5, 2009

அவள்(ன்)

மின்னல் பெண்மை கண்ணை பறிக்க
கன்னல் இனிமை குரலில் தெறிக்க
அன்ன நடையை அழகாய் பயின்று
சின்ன மனதை கிறங்க வைத்தாள்

பதுமை வந்த அழகை பார்த்து
மெதுவாய் பின்னே சென்ற கூட்டம்
பதறி ஓடும் காரணம் என்ன?
பாவம் "அவளின்" பிறவி தானா?