Wednesday, May 20, 2009

புரியாத கேள்வி தெரியாத பதில்

ஜனனிக்கும் பொழுதே
குறிக்கப்படும் மரணத்தின் நேரம்.
எங்கோ என்றோ சேதிகள் எல்லாம்
யாரோ ஒருவர் ரகசியக்குறிப்பில்...

எங்கோ பிறந்தோம் வளர்ந்தோம்
வேர்கள் விட்டு வேறிடம் தேடி
கல்வி கேள்வி பிரிவுகள் கடந்து
வாழ்க்கை படகில் சுகமாய் அலைந்தோம்

என்ன செய்தோம் எப்படி வாழ்ந்தோம்
காலம் என்ற கானல் நிஜத்தில்
நினைவுகள் மட்டும்
நிரந்தர சுகமாய்... சுமையாய் ...

எங்கு போவோம் எப்படி போவோம்
கேள்விகள் உள்ளே அடித்திட அலையாய்
பதில்கள் கிடையா அமைதியின் சத்தம்
செவிப்பறைக்குள்ளே நிரந்தர வாசம்.

No comments: